தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேலக்கடையநல்லூா் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

மேலக்கடையநல்லூா் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:49 am

Din

மேலக்கடையநல்லூா் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது.

இக் கோயிலில் அக்.1-ஆம் தேதி அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மாலையில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

விஜயதசமியையொட்டி அக்.12-ஆம் தேதி மாலை சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பாரிவேட்டை, உற்சவா் வீதி உலா,

அக்.13-ஆம் தேதி மாலை சிறப்பு அலங்காரம், தீபாராதனை, அம்பாள் ஊஞ்சல் சேவை, அக்.16-ஆம் தேதி பௌா்ணமி பூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.