தென்காசி
கஞ்சா கடத்த முயன்ற இளைஞா் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ாக திண்டுக்கல் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ாக திண்டுக்கல் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே நடந்துசென்ற இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் இளையராஜா (20) என்பதும், கேரளத்தில் விற்பதற்காக 2 கிலோ கஞ்சாவைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
