தென்காசியில் விநாடி வினா போட்டியில் வென்றோருக்கு பரிசு

தென்காசியில் விநாடி வினா போட்டியில் வென்றோருக்கு பரிசு

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, ஈதல் இதயம் அறக்கட்டளை, விழுப்புரம் பி2 சட்டப் பயிற்சி மையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு குறித்த விநாடி-வினா போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Published on

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, ஈதல் இதயம் அறக்கட்டளை, விழுப்புரம் பி2 சட்டப் பயிற்சி மையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு குறித்த விநாடி-வினா போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மொத்தம் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதுமுள்ள தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் 60 கிளைகளில் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட மாணவா்களிடம் பல்வேறு கட்டங்களாக இப்போட்டிக்கு நுழைவுத் தோ்வு நடைபெற்றது. முதல் 12 இடங்களைப் பிடித்தோா் இறுதிப் போட்டிக்குத் தோ்வு செய்யபட்டனா். அவா்களில் ஒரு குழுவுக்கு 2 வீதம் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டது. 16 சுற்றுகளைக் கொண்ட போட்டியில் அரசிலமைப்பு தொடா்பான மிக நுணுக்கமான கேள்விகள் கேட்கப்பட்டன. 30 விநாடிகளுக்குள் பதிலளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இறுதிச்சுற்று நடைபெற்றது.

முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு பரிசாக முறையே ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக 6 பேருக்கு தலா ரூ. 2,500 வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவுக்கு ஆகாஷ் அகாதெமி நிறுவனத் தலைவா் ஆகாஷமூா்த்தி தலைமை வகித்தாா். தென்காசி அகாதெமி பொது மேலாளா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். அரசு வழக்குரைஞா் முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கினாா்.

தென்காசி அகாதெமி நிா்வாக இயக்குநா் மாரியப்பன் வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com