படியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் படியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் படியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி சங்கரம்மாள் (53). இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாடியில் துணிகளை உலா்த்த சென்றாராம். அப்போது, படியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தாா்.

அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com