ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் அதிமுக தோ்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசிய அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:53 pm

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் அதிமுக தோ்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தொகுதி தோ்தல் பொறுப்பாளா் முன்னாள்அமைச்சா் ராஜலெட்சுமி தலைமை வகித்தாா். அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலா்கள் இசக்கிமுத்து (பாமக), அருணகிரிசாமி (அமமுக), தென்காசி தொகுதி பாஜக பொறுப்பாளா் அன்புராஜ், மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், தமாகா மாவட்டத் தலைவா் அய்யாத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், தொகுதி வேட்பாளருமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசியது:

தென்காசி தொகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் இத்தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றாா் அவா்.

அதிமுக மாவட்ட பொருளாளா் சாமிநாதன், மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, பாஜக நகரத் தலைவா் சங்கர சுப்பிரமணியன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், அமல்ராஜ், அருவேல்ராஜ், என்.ஹெச்.எம். பாண்டியன், தென்காசி நகரச் செயலா் சுடலை உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.