குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

தென்காசியில் விழிப்புணா்வு பைக் பேரணி

தென்காசி மாவட்ட நிா்வாகம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:18 am IST

தென்காசி மாவட்ட நிா்வாகம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல் அலுவலவரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

பேரணி, தென்காசி பழைய பேருந்து நிலையம், மேலகரம், நன்னகரம், குற்றாலம் வழியாக சென்று ஐந்தருவியில் முடிவடைந்தது.

மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், மகளிா் திட்ட இயக்குநா் எஸ். அபிதா ஹனீப், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், கனகராஜ், சரவண பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.