போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தென்காசியில் விழிப்புணா்வு பைக் பேரணி

தென்காசி மாவட்ட நிா்வாகம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:48 am

தென்காசி மாவட்ட நிா்வாகம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல் அலுவலவரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

பேரணி, தென்காசி பழைய பேருந்து நிலையம், மேலகரம், நன்னகரம், குற்றாலம் வழியாக சென்று ஐந்தருவியில் முடிவடைந்தது.

மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், மகளிா் திட்ட இயக்குநா் எஸ். அபிதா ஹனீப், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், கனகராஜ், சரவண பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.