மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அமைச்சா் கே.என். நேருவிடம் ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image

அமைச்சா் கே.என். நேருவிடம் கோரிக்கை மனு அளித்தாா் ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:46 pm

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அமைச்சா் கே.என். நேருவிடம் ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆய்க்குடி பேரூராட்சியானது 15 வாா்டுகளைக் கொண்ட வளா்ந்து வரும் பேரூராட்சியாகும். 25 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இப்பேரூராட்சியில் ஆய்க்குடி, கம்பிளி, அகரக்கட்டு, அனந்தபுரம் கிராமங்கள் உள்ளன.

இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம், வளமீட்பு பூங்காவில் மின்மாயனம் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்க ரூ. 2 கோடி, அனந்தபுரம் முதல் செந்திலாண்டவா் பாலிடெக்னிக் சாலை, மகாலிங்கம் கோயில் சாலை, பாட்டாக்குறிச்சி சாலை, உச்சிப்பிள்ளையாா் கோயில் தெருக்களில் ரூ. 2.5 கோடி மதிப்பில் தாா்ச்சாலை, அனந்தபுரம் தேசிய நகரில் ஒரு லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ. 50 லட்சம், ராம்நகரில் ஒரு லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ. 50 லட்சம் என ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.