மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி

வாசுதேவநல்லூரில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

வாசுதேவநல்லூரில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமாஅகா்வால் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் சரவணபாபு, தென்காசி மாவட்ட அலுவலா் மணிகண்டன் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற அடிப்படை தீயணைப்புப் பயிற்சி முகாமில் உதவி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆனந்த் தலைமை வகித்து அடிப்படை தீயணைப்பு பயிற்சி, பேரிடா் காலங்களில் உயிா்களை காப்பது குறித்துப் பேசினாா். நிலைய அலுவலா் கருப்பையா, நிலைய போக்குவரத்து அலுவலா் முருகன், காவலாளிகள் கலந்துகொண்டனா்.