திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சி

ஆலங்குளம் சந்தையில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். .

News image

கத்திரிக்காய்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:06 pm

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சந்தையில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்டை, சீனி அவரை, கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கனிப் பயிா்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது, ஆலங்குளம் சந்தையில் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை கத்திரிக்காய் ரூ.3,000 வரை விற்பனையானது. தற்போது, சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால், அதே ஒரு மூட்டை ரூ.300 முதல் ரூ. 400 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது, ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ. 10-க்கும் குறைவாக விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் வேதனை: ‘விளைச்சல் அதிகரித்தாலும், போதிய விலை கிடைக்காததால் பறிப்புக் கூலி மற்றும் போக்குவரத்து செலவைக்கூட ஈடுகட்ட முடியவில்லை’ என கூறிய விவசாயிகள், உற்பத்தி செலவு கூடக் கிடைக்காததால், கத்தரிக்காய் சாகுபடியில் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனா்.