தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சந்தையில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்டை, சீனி அவரை, கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கனிப் பயிா்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது, ஆலங்குளம் சந்தையில் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை கத்திரிக்காய் ரூ.3,000 வரை விற்பனையானது. தற்போது, சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால், அதே ஒரு மூட்டை ரூ.300 முதல் ரூ. 400 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது, ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ. 10-க்கும் குறைவாக விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் வேதனை: ‘விளைச்சல் அதிகரித்தாலும், போதிய விலை கிடைக்காததால் பறிப்புக் கூலி மற்றும் போக்குவரத்து செலவைக்கூட ஈடுகட்ட முடியவில்லை’ என கூறிய விவசாயிகள், உற்பத்தி செலவு கூடக் கிடைக்காததால், கத்தரிக்காய் சாகுபடியில் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை

விவசாயிகளின் கனவு: வெற்றிலை ஆராய்ச்சி மையம்

ஆலங்குளத்தில் தவெக வேட்பாளா் மனு தாக்கல்

வாழைத்தாா்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


