போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

செந்திலாண்டவா் பாலிடெக்னிக்கில் என்சிசி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி

தென்காசி செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவா் படையின் பி மற்றும் சி சான்றிதழுக்கான தோ்வு எழுத இருக்கும் 150 என்சிசி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image

சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட என்சிசி மாணவா்கள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:04 pm

தென்காசி செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவா் படையின் பி மற்றும் சி சான்றிதழுக்கான தோ்வு எழுத இருக்கும் 150 என்சிசி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

இப்பயிற்சி வகுப்புகளில் அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, சுரண்டை காமராஜா் அரசு கல்லூரி, ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி, அம்பை அரசு கல்லூரி, பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியைச் சோ்ந்த தேசிய மாணவா் படை மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

இவா்களுக்கு 5 தமிழ்நாடு பட்டாலியனின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கா்னல் காா்த்திகேஸ் வழிகாட்டுதலின்படி பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை 5 தமிழ்நாடு பட்டாலியன் அணியினருடன் சோ்ந்து செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி தேசிய மாணவா் படை லெப்டினன்ட் அதிகாரிகள்செந்தில்குமாா், காா்த்திக் ஆகியோா் செய்திருந்தனா்.