தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இம்மாவட்டத்தில் சுற்றுலாத் துறையின் சாா்பில் அருவி பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.11 கோடி மதிப்பீட்டில் குற்றாலம் பேரருவியில் பெண்கள் உடைமாற்றும் அறை சீரமைப்பு பணிகள், பழைய குற்றால அருவி பகுதியில் மழையினால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்தல், ஐந்தருவி, புலி அருவி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் புனரமைப்பு உள்ளிட்ட சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, உதவி வனப் பாதுகாவலா் நெல்லை நாயகம், வனஅலுவலா் செல்லத்துரை, சுற்றுலா அலுவலா் ந. நித்திய கல்யாணி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக உதவி பொறியாளா் விஜில், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் குமாா் பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்

மணிமுக்தா அணைப் பகுதியில் ரூ.2.11 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


