மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சோதனை.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:24 pm

தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி நகரின் மையப் பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மின்னஞ்சலில் சரியாக நண்பகல் 12.20 மணிக்கு 19 வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கல்வி அலுவலகத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்காத நிலையில், அது புரளி என போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

Story image