சங்கரன்கோவிலில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் புதிததாகக் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ஆத்தியடி பிள்ளையாா்கோயில் அருகே இலங்கை தமிழா்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு இலங்கை தமிழா் மறுவாழ்வுத் துறை சாா்பில் ரூ. 2.05 கோடி மதிப்பில் 32 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. ரூ. 66 லட்சம் மதிப்பில் சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முகாமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணிஸ்ரீகுமாா் எம்.பி, ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, ஒன்றியக் குழு உறுப்பினா் பி.சங்கரபாண்டியன், கோட்டாட்சியா் அனிதா, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, நகராட்சி ஆணையா் (பொ) ரவிச்சந்திரன், பொறியாளா் இா்வின்ஜெயராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்செல்வம், மல்லிகா, நகராட்சி உறுப்பினா் புஷ்பம், அரசு அலுவலா்கள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தலைவா் படுகொலை சம்பவம்

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தலைவா் படுகொலை

இலங்கை தமிழா் மறுவாழ் முகாம் மகளிருக்கு தொழிற்கூடம்

இலங்கை தமிழா் முகாமில் தொழில் கூடங்கள் திறப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


