சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய லாபம் கிடைக்காததால் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு டன் கேந்திப் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.
சங்கரன்கோவில், அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பூ சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மல்லி, பிச்சி, முல்லை, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி, சேவல், சம்பங்கி உள்ளிட்ட பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு அவை சங்கரன்கோவில் பூச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .
கடந்த சில நாள்களாக கேந்திப் பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு விலையில்லை. இதனால் அவற்றின் விலையும் வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை கேந்திப் பூ விலை, கிலோ ரூ. 10-க்கு விற்பனையானது. உரிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள், வியாபாரிகள் ஒரு டன் கேந்திப் பூக்களை சந்தைக்கு வெளியே சாலையில் கொட்டினா்.
தொடர்புடையது

உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.118 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

கிலோ ரூ.15 ஆயிரம் குறைந்த வெள்ளி: தங்கம்?

வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு: சூடு பிடிக்கும் விறகு விற்பனை; டன் ரூ.4,000 தாண்டியது

வெளியே செல்வோர் கவனத்துக்கு! மார்ச் 26 முதல் வெய்யில் கொளுத்தும்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


