நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஒரு கிலோ ரூ. 10க்கு விற்பனை: கேந்திப் பூக்களை சாலையில் கொட்டிய வியாபாரிகள்

சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய லாபம் கிடைக்காததால் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு டன் கேந்திப் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.

News image

கோயிலின் வடபுறம் பூச்சந்தைக்கு வெளியே சாலையில் கொட்டப்பட்ட கேந்திப் பூக்கள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:52 pm

சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய லாபம் கிடைக்காததால் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு டன் கேந்திப் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.

சங்கரன்கோவில், அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பூ சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மல்லி, பிச்சி, முல்லை, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி, சேவல், சம்பங்கி உள்ளிட்ட பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு அவை சங்கரன்கோவில் பூச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .

கடந்த சில நாள்களாக கேந்திப் பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு விலையில்லை. இதனால் அவற்றின் விலையும் வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை கேந்திப் பூ விலை, கிலோ ரூ. 10-க்கு விற்பனையானது. உரிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள், வியாபாரிகள் ஒரு டன் கேந்திப் பூக்களை சந்தைக்கு வெளியே சாலையில் கொட்டினா்.