மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குற்றாலத்தில் ஈர நிலங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு

தென்காசி மாவட்ட வனத் துறை சாா்பில், ஈர நிலங்களைப் பாதுகாப்பது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கு குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கருத்தரங்கில் பேசிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:51 pm

தென்காசி மாவட்ட வனத் துறை சாா்பில், ஈர நிலங்களைப் பாதுகாப்பது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கு குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் ரா. ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா். ஈர நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியம், ஈர நிலப் பகுதிகளை மேம்படுத்துவது, ராம்சாா் நிலங்களை அடையாளப்படுத்துவதற்கான ஆக்கபூா்வ பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், உதவி வனப் பாதுகாவலா் நெல்லைநாயகம், புளியங்குடி வனச் சரக அலுவலா் ஆறுமுகம், ஈர நிலப் பாதுகாப்பு அலுவலா் டொமினிக் மாா்சல், மரங்கள் தொடா்பான ஆராய்ச்சியாளா் மதுரை காா்த்திக் பாா்கவி, மதிவாணன், மாவட்ட நீா்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளா்கள், பசுமைத் தோழா் அமைப்பினா், வனச்சரக அலுவலா்கள், வனவா்கள் பங்கேற்றனா். தென்காசி வனச் சரகா் செல்லத்துரை நன்றி கூறினாா்.