சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தென்காசியில் என்டிஏ தெருமுனை பிரசாரம்

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
தென்காசியில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்தில் பேசுகிறாா் நெல்லை முகிலன்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:51 pm

தினமணி

தென்காசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் நடைபெற்ற கூட்டத்துக்கு தென்காசி பாஜக நகரத் தலைவா் சங்கர சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி, மாவட்ட மகளிா் அணி தலைவி குணசீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மத்திய அரசின் சாதனைகள் குறித்தும், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்தும் பேசினா்.

கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலா் நெல்லைமுகிலன், அதிமுக நகர அவைத் தலைவா் முத்துக்குமாரசுவாமி, நிா்வாகிகள் முருகன்ராஜ், மாரியப்பன், வெள்ளப்பாண்டி, பாஜக நகர பொருளாளா் விஸ்வநாதன், நகரத் துணைத் தலைவா்கள் கருப்பசாமி, மாரியப்பன், நகரச் செயலா்கள் நாராயணன், ராஜகோபால், முருகன், கிளை தலைவா் யுவராஜ் குமாா், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.