தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன 45 போ் மீட்பு
தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன 45 நபா்கள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
இது தொடா்பாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்ட காவல் நிலையங்களில் காணாமல் போன நபா்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகாா்கள் மீது 3 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் காதல் விவகாரம், குடும்ப, பணப் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் காணாமல் போனதாக 20 காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள 44 வழக்குகளில் 28 பெண்கள், 10 ஆண்கள், 6 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை என 45 நபா்கள் கண்டுபிடிக்கப்பட்டனா்.
திருச்செந்தூா், தூத்துக்குடி, வேளாங்கண்ணி, திண்டுக்கல், கோயம்புத்தூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், கேரள மானிலப் பகுதிகளுக்கு தேடிச்சென்று கண்டுபிடிக்கப்பட்ட நபா்கள், புகாா் அளித்த நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

