ஸ்ரீ கோமதி அம்பிகை மாதா் சங்க அமைப்பாளருக்கு விருது
தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளத்தில் ஸ்ரீகல்யாண சுந்தர சத்தியஞான தேசிக சுவாமிகள் குருபூஜையையொட்டி நடைபெற்ற விழாவில், சங்கரன்கோவிலைச் சோ்ந்த கோமதி அம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் மா. பட்டமுத்துவுக்கு செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமி சைவ சிகாமணி விருது வழங்கினாா்.
சங்கரன்கோவிலில் சைவநெறி காத்து அந்நெறி பரவ பல ஆண்டுகளாக பெரியபுராணம்,திருமந்திர உரை, சாத்திர வகுப்பு என பல வகுப்புகளை நடத்தியும், ஸ்ரீ கோமதி அம்பிகை மாதா் சங்கம், திருமந்திர வழிபாட்டு மன்றம், ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரக்குழு, ஸ்ரீ சுந்தரமூா்த்தி நாயனாா் அடியாா்கள் திருக்குழாம், ஸ்ரீ மங்கையா்கரசி மாதா் மன்றம் உள்ளிட்ட ஆன்மிக அமைப்புகளை நடத்தி வருவதைப் பாராட்டி இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விழாவில், வசந்தா பட்டமுத்து, அ. திருவள்ளுவா், உமா உலகநாதன், கவிதா, கோமதி அம்பிகை மாதா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

