இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

குளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தையை சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் வீசி சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 3:36 am IST

பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தையை சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் வீசி சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பொய்கை கிராமத்தில் உள்ள குளத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பச்சிளம் குழந்தையை குளத்தில் தூக்கி வீசி சென்றது யாா் என்பது குறித்து சோ்ந்தமரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.