ஆலங்குளத்தில்,பவ்டா தொண்டுநிறுவனம் மற்றும் புதுதில்லி சாதான்நிறுவனம் மற்றும் எம்பின் நிறுவனம் ஆகியன சார்பில்,சிறுநிதி விழிப்புணர்வு மாநாடு மற்றும் எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி க்கு பாராட்டுவிழா ஆகியன நடைபெற்றது.
விழாவுக்கு சாதான் நிறுவன தமிழக தலைவர் பீட்டர் பழனிச்சாமி தலைமை வகித்தார். சாதான் நிறுவனத்தின் தேசிய துணைத்தலைவர் அச்சலா,பவ்டா முதன்மை செயல்பாட்டு அலுவலர் அல்பினாஜாஸ்,பவ்டா மக்கள் தொடர்பு அலுவலர் கே.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி கலந்து கொண்டு,பவ்டா மகளிர் சுயசுயஉதவிக்குழுவை சேர்ந்த,சிறந்த குழுக்களுக்கு பரிசுகள் வழங்கி,ஏற்புரை நிகழ்த்தினார்.முன்னதாக பவ்டா உதவி இயக்குநர் எம்.ராஸ் வரவேற்றார்.குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.