ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சத தேர்ச்சி பெற்றனர்.
ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு 60 மாணவ,மாணவியர்கள் எழுதினர்.தேர்வு எழுதிய அனைவருமே தேர்ச்சி பெற்றனர்.இதனால் 100 சத தேர்ச்சியாகும்.
இதில் 28 பேர் 450 க்கு மேலும்,51 பேர் 400 க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.கணித பாடத்தில் மூன்று பேரும்,சமூக அறிவியல் பாடத்தில் 5 பேரும்,அறிவியல் பாடத்தில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி அளவில் ஆர்.முகதாரினி,எஸ்.பிரின்சஸ்ஸ்வேதா ஆகியோர் 486 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும்,எஸ்.மீனா அபராஜிதா 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்,எஸ்.கணேஷ்குமார்,கே.சர்மிளா ஆகியோர் 480 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களை பள்ளித்தாளாளரும் முதல்வருமான டி.சித்ராதேவி மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பாராட்டினர்.