கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் சாவு

புளியங்குடி சிந்தாமணியில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
Updated on
1 min read

புளியங்குடி சிந்தாமணியில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
சிந்தாமணி அம்பேத்கர்நகர் 4 ஆவது தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் கனகராஜ்(29). இவர்செவ்வாய்க்கிழமை செல்வம் என்பவரது கிணற்றிற்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றாராம். அப்போது கனகராஜ் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புளியங்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com