விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாநில கராத்தே போட்டி: நெல்லை வீரர்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருநெல்வேலி வீரர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:41 am

DIN

மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருநெல்வேலி வீரர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
ஆலன் திலக் சிட்டோரியோ கராத்தே பள்ளி சார்பில் 8 ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டிகள் திருச்செந்தூரில் அண்மையில் நடைபெற்றது.
 திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். இப் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட கென்வா சிட்டோரியோ கராத்தே பள்ளியின் சார்பில் தலைமை பயிற்சியாளர் சீ கான் சேக் முகம்மது தலைமையில் வீரர்கள் பங்கேற்றனர். கட்டா மற்றும் குமித்தே பிரிவுகளில் 14 தங்கப்பதக்கங்களையும், 4 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களையும் திருநெல்வேலி வீரர்-வீராங்கனைகள் வென்றனர். சிறப்பிடம் பெற்றவர்களை பயிற்சியாளர்கள் பேட்டை ஹக்கீம், ஆசிக்அலி, பெற்றோர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.