நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நெல்லையில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

திருநெல்வேலியில் திருமண வயதை எட்டாத இருவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். 

Updated On :19 ஏப்ரல் 2018, 2:11 am IST

திருநெல்வேலியில் திருமண வயதை எட்டாத இருவருக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். 
    தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயதுள்ள பெண்ணுக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த 20 வயதுள்ள ஒருவருக்கும் புதன்கிழமை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
   இதையடுத்து மாவட்ட குழந்தை நல அலுவலர் தேவ்ஆனந்த் தலைமையில் திருநெல்வேலி வட்டாட்சியர் கந்தசாமி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் ஆகியோர் பாளையங்கோட்டையில் மனகாவலம்பிள்ளை நகருக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 
திருமண வயது பூர்த்தி ஆகாத நிலையில் திருமணம் செய்வது சட்டப்படி தவறு என பெற்றோர்களுக்கு ஆலோசனை தெரிவித்தனர்.   இதைத் தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது.
  இருவரும் ஒராண்டுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். அவர்களது பெற்றோரும் உறுதி அளித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.