கோவில்பட்டியில், வைகோவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதாக பாஜக நிர்வாகிகள் 2 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கோவில்பட்டி பயணியர் விடுதி முன் வாகனப் பிரசாரத்தை வைகோ செவ்வாய்க்கிழமை தொடங்கினார். இந்நிலையில், பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக வைகோவைக் கண்டித்தும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகக் கண்டித்தும் பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமையில் இரு பெண்கள் உள்பட 54 பேர் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் கட்சிக் கொடி மற்றும் கருப்புக் கொடியை ஏந்தியபடி வைகோவை எதிர்த்து கோஷமிட்டனர்.
பின்னர், அண்ணா பேருந்து நிலைய வளாகத்திலிருந்து பயணியர் விடுதி நோக்கி வர முயன்றனர். அப்போது, டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, கருப்புக் கொடி காட்ட முயன்றதாக 54 பேரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெட்டாவில் ஆள்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் - பின்னணியில் என்ன?

மனித உரிமை செயல்பாட்டாளர்களை மண்டியிடச் செய்த இஸ்ரேல் அமைச்சர்: வலுக்கும் கண்டனம்!

இன்றைய செய்திகள்! - நேரலை

அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


