திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 15 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களிடம் துணிப் பையை பயன்படுத்துவது குறித்தும், பிளாஸ்டிக் பையை தவிர்ப்பது குறித்தும் ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இக்கூட்டத்தில், பாளையங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியர் வழங்கினார். மேலும், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் மாறன், உதவி ஆணையர் (கலால்) பழனிக்குமார், பாளையங்கோட்டை வட்டாட்சியர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







