தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

பாளை.யில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் வங்கி இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள்,  அதிகாரிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :25 டிசம்பர் 2018, 10:06 am IST

பாளையங்கோட்டையில் வங்கி இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள்,  அதிகாரிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
விஜயா வங்கி, தேனாவங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றை இணைக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அடங்கிய 9 சங்கங்கள் இணைந்து வரும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. 
அதன் முன்னோட்டமாக பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி முருகன் தலைமை வகித்தார்.  அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி விக்டர் துரைராஜ் முன்னிலை வகித்தார். தேசிய வங்கி ஊழியர் அமைப்பைச் சேர்ந்த கில்பர்ட்,  வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி சரவணராஜா, வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம்,  வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு நிர்வாகி செந்தில் ஆறுமுகம் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் வங்கி அதிகாரிகள்,  ஊழியர்கள் பங்கேற்றனர்.  வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சக்திவேலாயுதம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.