மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் திருநெல்வேலியில் 23.7.1999 இல் பேரணி நடத்தியபோது ஏற்பட்ட கலவரத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 23 ஆம் தேதி புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கட்சிகள் உள்பட மொத்தம் 30 அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்த காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றில் கொக்கிரகுளம் பாலம் அருகில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
ஐ.ஜி. ஆய்வு: தற்போது கொக்கிரகுளம் பாலம் அருகில் மற்றொரு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், ஆற்றங்கரையில் காவல் துறை சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், மாநகர காவல் ஆணையர் மகேந்திரகுமார் ரத்தோட், மாநகர காவல் துணை ஆணையர் சுகுணாசிங், உதவி ஆணையர் நாகசங்கர் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.
அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி, திருநெல்வேலி மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் இருந்து வண்ணார்பேட்டை வழியாக சந்திப்பு செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலை, உடையார்பட்டி வழியாக செல்லும் வகையிலும், சந்திப்பில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் வாகனங்கள் உடையார்பட்டி வழியாக வந்து செல்லும் வகையிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


