தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

தாமிரவருணி நதிக்கரையில் மரக்கன்று நடும் பணி தொடக்கம்

திருநெல்வேலியில் தாமிரவருணி புஷ்கரம் குழு சார்பில் நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On :5 நவம்பர் 2018, 7:50 am IST

திருநெல்வேலியில் தாமிரவருணி புஷ்கரம் குழு சார்பில் நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தாமிரவருணி மஹா புஷ்கரம் குழு சார்பில், நதி குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவும், ஒவ்வொரு பௌர்ணமி தினத்தில் நதிக்கரையில் படித்துறையில் மங்கள ஆரத்தி வழிபாடு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மரக்கன்றுகள் நடும் பணி  தொடங்கப்பட்டது. திருநெல்வேலி கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தை சுற்றிலும் மரக்கன்று நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சி.எஸ். குமார் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். பாஜக மாநில இளைஞரணிச் செயலர் வேல். ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்டப் பொதுச்செயலர் ஆ. மகராஜன், மாவட்ட துணைத் தலைவர் சீதா, எஸ்.சி., எஸ்.டி. அணி நிர்வாகி முருகதாஸ், ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் குணதுரை, சரவணன், கைலாசநாதர் சுவாமி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர். 21 மரக்கன்றுகள் நடப்பட்டன.  தொடர்ந்து நதிக்கரையில் பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை மரக்கன்றுகள் நடப்படும் என இக்குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.