திருநெல்வேலியில் தாமிரவருணி புஷ்கரம் குழு சார்பில் நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தாமிரவருணி மஹா புஷ்கரம் குழு சார்பில், நதி குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவும், ஒவ்வொரு பௌர்ணமி தினத்தில் நதிக்கரையில் படித்துறையில் மங்கள ஆரத்தி வழிபாடு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. திருநெல்வேலி கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தை சுற்றிலும் மரக்கன்று நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சி.எஸ். குமார் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். பாஜக மாநில இளைஞரணிச் செயலர் வேல். ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்டப் பொதுச்செயலர் ஆ. மகராஜன், மாவட்ட துணைத் தலைவர் சீதா, எஸ்.சி., எஸ்.டி. அணி நிர்வாகி முருகதாஸ், ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் குணதுரை, சரவணன், கைலாசநாதர் சுவாமி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர். 21 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து நதிக்கரையில் பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை மரக்கன்றுகள் நடப்படும் என இக்குழுவினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

தந்தையர் நாள்! என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்?

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


