மேலப்பாளையத்தில் பொடா சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட வழக்குரைஞர் அணி சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு அமைப்பின் மாவட்டச் செயலர் அலிப் நிஜாம் தலைமை வகித்தார். தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் நெல்லை எம். ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், கட்சியின் மாநில அமைப்புச் செயலர் எம். ஜெய்னுல்ஆப்தீன், வழக்குரைஞரணி அணை மாநிலச் செயலர் ஏ. அப்ரர் அஹம்மது, வழக்குரைஞர்கள் எஸ்.எம்.ஏ. ஜின்னா, புகழேந்தி, பா. மோகன் ஆகியோர் பேசினர்.
கட்சியின் மாவட்ட துணைச் செயலர் பெஸ்ட் ரசூல், மாவட்ட இளைஞரணிச் செயலர் யூசுப் சுல்தான், மருத்துவ சேவை அணிச் செயலர் ஏ.கே. அப்துல்கனி, நிர்வாகிகள் மேலப்பாளையம் செய்யது, கே.ஏ. ஞானியார், ஏ.ஆர். பாதுஷா, வி.கே. அசன்மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகுதிச் செயலர் அ. காஜா வரவேற்றார். பகுதித் தலைவர் தேயிலை மைதீன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!






