கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாளை.யில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2018, 11:56 pm

DIN


தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய் துறையில் வழங்கப்படும் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே வழங்க வேண்டும்; பட்டா மாறுதல் கோப்புகளை முழுவடிவில் தயார் செய்யும் பொறுப்பை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பாளை. வட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராணி, பிரசாரச் செயலர் சுப்பிரமணியன், துணைச் செயலர் சுபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் நாராயணன், திருநெல்வேலி வட்டத் தலைவர் மணிகண்டன், மானூர் வட்டத் தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.