பாளை.யில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய் துறையில் வழங்கப்படும் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே வழங்க வேண்டும்; பட்டா மாறுதல் கோப்புகளை முழுவடிவில் தயார் செய்யும் பொறுப்பை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பாளை. வட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராணி, பிரசாரச் செயலர் சுப்பிரமணியன், துணைச் செயலர் சுபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் நாராயணன், திருநெல்வேலி வட்டத் தலைவர் மணிகண்டன், மானூர் வட்டத் தலைவர் ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...