ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

"சிறுபான்மையினர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்'

சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற சிறுபான்மையினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:57 am

சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற சிறுபான்மையினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் கிறிஸ்துவ,  இஸ்லாமியர், பெளத்தர், சீக்கியர்,  பார்சி மற்றும் சமண சமயத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர சுயதொழில் தொடங்கவும்,  செய்யும் தொழிலை மேம்படுத்தவும் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட கண்காணிப்புக் குழுவில் கூடுதலாக சிறுபான்மையினத்தை சேர்ந்த இருவர் நியமிக்கப்பட உள்ளனர். 
இதற்கு விண்ணப்பிக்க சிறப்பான முறையில் சுயதொழில் செய்து கொண்டிருப்பவராகவோ, தொழில் சார்ந்த கல்வி கற்று ஆலோசனை வழங்குவதற்கு தகுதி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். உதாரணமாக ஆடிட்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் சிறுதொழில்  பட்டதாரிகளாக இருக்கலாம்).  நியமிக்கப்பட உள்ள உறுப்பினர்கள் இருவரும் வெவ்வேறு சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.  எனவே தகுதியுடைய கண்காணிப்புக் குழுவில் இடம்பெற விரும்பும் சிறுபான்மையினத்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தை வரும் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.