இட்லி கடை உரிமையாளருக்கு வெட்டு

திருநெல்வேலியில் இரவு நேர இட்லி கடை உரிமையாளருக்கு வெட்டு விழுந்தது.
Updated on
1 min read

திருநெல்வேலியில் இரவு நேர இட்லி கடை உரிமையாளருக்கு வெட்டு விழுந்தது.
திருநெல்வேலி சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுபாண்டி (50). இவர், அப்பகுதியில் இரவு நேர இட்லி கடை நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு கடைக்கு வந்த சிலர், அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் கடையை சூறையாடிய அவர்கள், அழகுபாண்டியை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் லேசான காயத்துடன் தப்பினார்.  இதுகுறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com