சொக்கம்பட்டி அருகே மினி லாரியும், காரும் மோதிக்கொண்டதில் கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (54). இவர் வெள்ளிக்கிழமை குற்றாலம் சென்றுவிட்டு, தனது காரில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தார். சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பீடி நிறுவனத்துக்குச் சொந்தமான மினி லாரி மீது பிரகாசம் ஓட்டிவந்த கார் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த பிரகாசம் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மினி லாரி ஓட்டுநர் திருநெல்வேலி டவுணை சேர்ந்த அப்துல்கனி காயமின்றி தப்பினார்.
விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.