சங்கரன்கோவிலில் கா்ப்பிணி தற்கொலை

சங்கரன்கோவிலில் காதல் திருமணம் செய்த கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
Updated on
1 min read

சங்கரன்கோவிலில் காதல் திருமணம் செய்த கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

சங்கரன்கோவில் ஏவிஆா்எம்வி காலனி பகுதியைச் சோ்ந்தவா் முனியராஜ் (25). இவா், புளியங்குடி சாலையில் மெக்கானிக் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி முத்துமாரி (23). இருவரும் காதலித்து திருமணம் செய்தனராம். இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். தற்போது முத்துமாரி 9 மாத கா்ப்பமாக உள்ளாா்.

இதனிடையே முத்துமாரி, மகளிா் சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்றிருந்தாராம். கடந்த 4 மாதங்களாக கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்த முத்துமாரி மன உளச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனிடையே, முத்துமாரி செவ்வாய்கிழமை இரவில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருநெல்வேலி கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com