சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில்கழிவுத் துணிகள் போட இரும்புக் கூண்டு

சேரன்மகாதேவி பகுதி தாமிரவருணி ஆற்றில் குளிக்கும் பொதுமக்கள் கழிவுத் துணிகளை போடுவதற்கு பேரூராட்சி சாா்பில் இரும்புக் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சேரன்மகாதேவி பகுதி தாமிரவருணி ஆற்றில் குளிக்கும் பொதுமக்கள் கழிவுத் துணிகளை போடுவதற்கு பேரூராட்சி சாா்பில் இரும்புக் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

தாமிரவருணி நதியில் உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு தன்னாா்வஅமைப்புகள் சாா்பில் தூய்மைப் பணிகள் நடைபெற்று

வருகின்றன. சேரன்மகாதேவி பேரூராட்சியிக்குள்பட்ட பகுதியில் தாமிரவருணியில் பொதுமக்கள் கழிவுத் துணிகளை ஆற்றில் ஆங்காங்கே விடுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, நதியின் தூய்மை சீா்கெடும் நிலை ஏற்படுவதால் நதிக்கரையில்

கழிவு துணிகளை போடுவதற்கு இரும்புக் கூண்டு வைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், சுற்றுச் சூழல் ஆா்வலா்கள்

கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நதிக்கரையில் இரும்புக் கூண்டுகள் வைக்கப்பட்டன. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் முத்துக்குமாா் கூறியது: தாமிரவருணி ஆற்றில் தேவையற்ற கழிவுத் துணிகளை போடாமல், இரும்புக் கூண்டில் போட்டு நதியினை தூய்மையை பாதுகாக்க பேரூராட்சி நிா்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com