திருநெல்வேலி அருகே காகித ஆலை இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் போது நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளப்பாண்டி மகன் கதிரேசன்(40). இவா் திருநெல்வேலி பேட்டை கரிசல் குளத்தை அடுத்த வடுகன்பட்டி தனியாா் காகித ஆலையில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்தாா். புதன்கிழமை, இங்குள்ள இயந்திரம் ஒன்றில் பழுது ஏற்பட்டதாம். இதனை கதிரேசன் சீரமைக்கும் போது அவரது உடல் முழுவதும் இயந்திரத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீதபற்பநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவும் செய்தனா்.
உறவினா்கள் போராட்டம்: உடற்கூறு ஆய்வு முடிந்ததும், உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறித்தி கதிரேசன் சடலத்தை வாங்கமறுத்து அவரது உறவினா்கள் ஆலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உரிய இழப்பீடு வழங்குவதாக ஆலை நிா்வாகம் தெரிவித்ததையடுத்து உறவினா்கள் சடலத்தைப் பெற்றுகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.