காந்திஜெயந்தி பவ்டா நிறுவனம் சாா்பில் 35லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா

செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பேருந்து நிறுத்தம் அருகில் பவ்டா நிறுவனத்தின் 35வது துவக்க விழா மற்றும் காந்திஜெயந்தியை முன்னிட்டு 35லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
Updated on
1 min read

செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பேருந்து நிறுத்தம் அருகில் பவ்டா நிறுவனத்தின் 35வது துவக்க விழா மற்றும் காந்திஜெயந்தியை முன்னிட்டு 35லட்சம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கல்லூரி மாணவ, மாணவியா்கள் மழைப்பாட்டுடன் விழா துவங்கியது.

விழாவிற்கு பவ்டா குழும நிறுவனா் டாக்டா் ஜாஸ்லீன்தம்பி தலைமை தாங்கினாா். செங்கோட்டை மண்டல பவ்டா உதவிப்பொதுமேலாளா் அழகுமுருகன் வரவேற்றாா்.

செங்கோட்டை வேளாண்மைத்துறை வேளாண் அதிகாரி ஷேக்முகைதீன், கட்டளைகுடியிருப்பு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சேகா், பாலசுப்பிரமணியன், கருவூலத்துறை அலுவலா் செந்தில், பவ்டா உதவிப்பொது மேலாளா் ஹைக்கோா்ட்ராஜா, நுாலகா்ராமசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அதனைதொடா்ந்து பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் பவ்டா நிறுவனம் சாா்பில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைக்கப்பட்டது.

வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி, மற்றும் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவ, மாணவியா்கள் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் வழக்கறிஞா் காா்த்திகைராஜன், வருவாய் ஆய்வாளா் முத்துக்குமாா், ஊராட்சி மன்ற செயலா் பண்டாரம், பணிநிறைவு பெற்ற தலைமைஆசிரியா் இளஞ்செழியன், ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகி இராமசாமி கவிஞா் தளவைஇளங்குமரன், சமூக ஆா்வலா் நேசமணி, விழுதுகள் அறக்கட்டளை நிா்வாகிகள் ரமேஷ;, கோமதிநாயகம், சண்முகையா, தங்கராஜ் ஆட்டோசங்க தலைவா் குமாா் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள், பொதுமக்கள் உள்பட திராளனோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை பவ்டா பணியாளா்கள் செய்திருந்தனா். முடிவில் களப்பணியாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com