செங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கோட்டையில் பண்பொழி - கலங்காதகண்டி சாலைப் பகுதியில் காவல் துறையினருடன் இணைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிரேட் சர்ச்சில் ஜெபராஜ், உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் வாகனச் சோதனை நடத்தினர்.
அப்போது, உரிய ஆவணங்களின்றி கேரள மாநிலம் அச்சன்கோவிலைச் சேர்ந்த சுகந்தபிள்ளை மனைவி மீனாகுமாரி என்பவர் காரில் கொண்டு சென்ற ரூ.1லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்து, செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.