ராதாபுரம் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 02nd April 2019 07:27 AM | Last Updated : 02nd April 2019 07:27 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ச.ஞானதிரவியத்தை ஆதரித்து, ராதாபுரம் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.
மகாதேவன்குளம், குமாரபுரம், ஊறுமன்குளம், அணைக்கரை, கஸ்தூரிரெங்கபுரம், கோட்டைகருங்குளம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக மக்களிடம் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.
இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, மதிமுக தீர்மானக்குழு தலைவர் அந்திரிதாஸ், புறநகர் மாவட்டச் செயலர் தி.மு. ராஜேந்திரன், காங்கிரஸ் மாநில சிறுபான்மைப் பிரிவுச் செயலர் கே.பி.கே ஜெயகுமார், மதிமுக ஒன்றியச் செயலர் சற்குணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ராதாபுரம் ஒன்றிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம், ஒன்றிய திமிக செயலர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது.