கம்பன் இலக்கியச் சங்கத்தின் 1,181ஆவது தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் கு. சடகோபன் தலைமை வகித்தார். பொருளாளர் மு.அ. நசீர் முன்னிலை வகித்தார். மகாலிங்கம் இறைவாழ்த்து பாடினார். இரா. முருகன், மகாலிங்க ஐயப்பன், பேராசிரியர் பா. வளன்அரசு ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
நிலா இலக்கிய வட்ட அமைப்பாளர் ந. ராசகோபால், ஆசிரியர் கோதைமாறன், நெல்லையப்பன், உமையொருபாகம், சுப்பிரமணியம், சண்முகையா, பிரபா கிருட்டிணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பி. சுந்தரம் வரவேற்றார். தி. ராமன் நன்றி கூறினார்.