கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அன்று காலை புண்ணியாகவாசனம்,  சிறப்பு திருமஞ்சனம்,  பவித்ரோத்ஸவ ஹோமம்,  பூர்ணாஹுதி, சுவாமி மற்றும் கருடாழ்வாருக்கு பவித்ரமாலை சமர்ப்பித்தல், சிறப்பு திருவாராதனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதி உலா, சுவாமிக்கு பவித்திர மாலை சமர்ப்பணம் செய்யப்பட்டது. திங்கள்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம், பவித்திரமாலை பிரதிஷ்டை,  நாம சங்கீர்த்தனம், மாலையில் சுவாமி சயன தரிசனம், சிறப்பு ஹோமம், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம் ஆகியன நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com