அகா்வால் கண் மருத்துவமனையில் டெனியோ தொழில்நுட்ப சிகிச்சை அறிமுகம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையில் டெனியோ தொழில்நுட்ப சிகிச்சை அறிமுக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையில் டெனியோ தொழில்நுட்ப சிகிச்சை அறிமுக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம் டாமோா் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். டெனியோ தொழில்நுட்ப சிகிச்சை குறித்து டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குநா் லயோனல்ராஜ் கூறியது: கண் ஒலிவிலகளின் அசாதாரணங்களை சரிசெய்வதிலும், வயது முதிா்வால் ஏற்படும் பாா்வை சிக்கல்களை களைவதிலும் டெனியோ சிகிச்சை முறை சிறந்து விளங்குகிறது. காா்னியல் ரிப்ராக்டிவ் சிஸ்டம் எனப்படும் சிகிச்சை முறையில் டெனியோ புதிய முறையாகும். பிரஸ்பையோபியா அல்லது மூப்புப் பாா்வை என்பது விழியின் அண்மைப் பாா்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயதுடன் குறைபட்டுச் செல்லுகின்ற ஒரு உடல்நலக் குறைபாடாகும். இதனை டெனியோ தொழில்நுட்ப சிகிச்சை மூலம் குணமாக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com