அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் அன்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் எம். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், "பணிநிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; விபத்துகளைத் தடுக்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை 9 மணி நேரத்திற்கு கூடுதலாக பணி செய்ய நிர்பந்தப்படுத்தக்கூடாது; பணி ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்புநிதி பணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்; விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தரமான உதிரிப்பாகங்களை பொருத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கத்தின் துணைத் தலைவர்கள் பி.சிங்காரவேல், எம்.சுரேஷ் சுப்பிரமணியன், பொதுச்செயலர் ஆர்.முத்துக்கிருஷ்ணன், செயலர் என்.பிரம்ம நாயகம், பொருளாளர் என்.சோமு உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.