கேரள அரசு சபரிமலையின் புனிதத்தை சீர்குலைத்ததாக தெரிவித்து திருநெல்வேலி நகரத்தில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் சுடலை, மாவட்ட துணைத் தலைவர் சங்கர், நகரத் தலைவர் துரைராஜ், நகர பொதுச்செயலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கேரள அரசைக் கண்டித்து பல்வேறு நிர்வாகிகள் பேசினர். அதைத் தொடர்ந்து கேரள அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.