பேட்டையில் விபத்து: இளைஞர் சாவு

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் நிகழ்ந்த விபத்தில் இளைஞர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் நிகழ்ந்த விபத்தில் இளைஞர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
பேட்டை சர்க்கரை விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் மகாராஜன் (25). இவர், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தார்.  சனிக்கிழமை மாலையில் மகாராஜன் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ் வழியாக வந்த லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகாராஜனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com