கீழக்கடையத்தில் திருட்டில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்து 14 கிராம் தங்க நகையை போலீஸார் மீட்டனர்.
கீழக்கடையம் சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பாஸ்கர் (53). இவரது வீட்டில் மே மாதம் 4ஆம் தேதி மர்ம நபர்கள் புகுந்து 14 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரூ. 6 ஆயிரத்தைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து கடையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கடையம் கல்யாணிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜெயசந்திரன் (35), அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (19), கணேசன் (25) உள்ளிட்ட 4 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 14 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.