மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்: இருவர் கைது

புளியங்குடி அருகே  மணல் கடத்தி வந்த 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read


புளியங்குடி அருகே  மணல் கடத்தி வந்த 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீஸார் சிங்கிலிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிங்கிலிபட்டி பிரதான சாலையில் வட மாவட்டத்திலிருந்து மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.  அதில் முறையான ஆவணமின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. 
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து,  லாரி ஓட்டுநரான திருச்சி மாவட்டம் துளுக்கம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த பொன்னையா மகன் பிச்சை (49),  திண்டுக்கல் மாவட்டம் புதூரைச் சேர்ந்த முத்துச்செட்டியார் மகன் கணபதி(48) ஆகிய இருவரைக் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com