நீராதார பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 28th March 2019 06:37 AM | Last Updated : 28th March 2019 06:37 AM | அ+அ அ- |

கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளி சார்பில் நீராதார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையொட்டி, பள்ளி மாணவர்கள் ஆறு, குளம் உள்ளிட்ட இடங்களில் நீரை சேமிக்கும் வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று அங்குள்ள பொது மக்களிடம் நீர் மேலாண்மை குறித்து விளக்கமளித்தனர். தொடர்ந்து பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளித் தாளாளர் ரமேஷ் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் மயில்கண்ணு,ஆசிரியை உஷா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...