நீராதார பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளி சார்பில் நீராதார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Updated on
1 min read

கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளி சார்பில் நீராதார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையொட்டி, பள்ளி மாணவர்கள் ஆறு, குளம் உள்ளிட்ட இடங்களில் நீரை சேமிக்கும் வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று அங்குள்ள பொது மக்களிடம் நீர் மேலாண்மை குறித்து விளக்கமளித்தனர்.  தொடர்ந்து பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளித் தாளாளர் ரமேஷ் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் மயில்கண்ணு,ஆசிரியை உஷா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com