புளியங்குடியில் வாகனத் தணிக்கை: ரூ. 80 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 06:38 AM | Last Updated : 28th March 2019 06:38 AM | அ+அ அ- |

வாசுதேவநல்லூர் தேர்தல் பறக்கும் படையினர் புளியங்குடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ. 80 ஆயித்தை பறிமுதல் செய்தனர்.
வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் ஜஸ்டின் ஜெயபால், உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஆ"ஃ"ப் வேல்ஸ் தலைமையிலான பறக்கும் படையினர் டி.என். புதுக்குடி, எலுமிச்சை சந்தை அருகில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் வந்த கேரள மாநிலம், சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த திபுஜோசப் என்பவருடைய இன்னோவா காரை மறித்துச் சோதனையிட்டபோது, அதில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ. 80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, சிவகிரி வட்டாட்சியர் கிருஷ்ணவேலிடம் ஒப்படைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...